Friday, October 24, 2008

நம்ம கருப்பு

கவலப்படாத -நம்ம கருப்பு இருக்கு!

போய்ப் பாத்துக் கல்பூரம் ஏத்திக் கும்புட்டு வா. '' ஊர், உலகத்தில், உயர்ந்த மதில்களுடன் கோயில்கள், கோபுரங்கள் இருக்கின்றன. ஆயிரம் இருந்தாலும் அம்மாவுக்கு யானைவாரி ஓடைக்கரையில் உள்ள குழுமூர் கருப்புதான். பூசாரித் தாத்தாவுக்குச் சொல்லி அனுப்பி அவரும் வந்து, நானும் போனேன். ``குவார்ட்டர்கூட இல்லாம கும்புடுறானாம், கும்புடு! '' உடைத்து வைத்துச் சூடம் ஏற்றினார். மணியை ஆட்டி, வேண்டிப் பாடினார்.` `ஒம்மா ஒன்ன வளக்க எம்மாம் பாடுபட்டவ தெரியுமா?' 'கருப்புக்குக்கூடத் தெரியாமல் இருக்கலாம். `காத்தாயி'க்குத் தெரியும்! நோய் நொடிகளில் இருந்து பேய் பிசாசுகளிடம் இருந்து காத்தஆயி. இவள் ஓடைக்கரையில் கிடக்கிறாள். அம்மா வீட்டுத் திண்ணையில். என்னோடு நகரத்துக்கு வந்து இருக்கலாம் இந்தக் காத்தாயிகள். வரமாட்டார்கள்! இவர்கள் இராச்சியம் இவர்களுக்கு. மறுப்பவர்களுக்குச் செய்ய முடிகிற மரியாதை : இப்படிப் போய் பார்ப்பதுதான் போலும்..
இன்று ஆயுதத்தைஅனுப்புகிறது - பௌத்தத்தைநேற்றுஇலங்கைக்கு அனுப்பியஇந்தியா
ஓடமுடியவில்லைவிடுதலைக்கு முன்புநம் கடலில்வ.உ.சி.யின் கப்பல்...இன்றுந்தான்-
ஓடமுடியவில்லைவிடுதலைக்குப் பின்பும்நம் கடலில்இந்திய மீனவனின்கப்பல்...
ஒட்டாத அமெரிக்காவும்ரஷ்யாவும் இணைந்தன-கொலைவெறிஹிட்லரைஎதிர்க்க
ஒட்டாதஇந்தியாவும்பாகிஸ்தானும்இணைந்தன -கொலைவெறிமகிந்தாவைஆதரிக்க...
புரியும்போல் இருக்கிறது இந்தியாவின்கொள்கை -நாராயணனுக்கு மட்டும்..