Saturday, November 28, 2009

காதல் கவிதைகள்


நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*



இரண்டு முத்தங்கள் கொடுத்து

இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.

இயலாத செயலென

இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.



*



யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.

எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

அளவின்றி பேசுகிறேன்.



*



உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

சிறகடித்து தவிக்கும் இமைகள்!



*



தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்

இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?




நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்
என் துபாய் கணவா






திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !


மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌஇவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ....

2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!


உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

Friday, November 20, 2009






அன்பே உன் நினைவு நெஞ்சை
வாளாய் அறுக்குது- நீ
அடிக்கடி காட்டிய உன்
ஆசைப் பார்வைகள் என்னை
ஆர்த்துச் சிரிக்குது.....

நெஞ்சமெலாம் ஆசைக்கனா
விரிந்து கிடக்குது
வஞ்சகனாய் உன்னை எண்ண
மனமும் மறுக்குது
விழியிமைத்து நினைவு கொள்ள
வீழ்ச்சி உறுத்துது
மன்னன் உந்தன் அன்பு மனம்
பணத்தில் சரியுது.....

எந்தன் பாசம் உன் மனதில்
வேஷம் ஆனதா?
என் கனவு பாஷையெல்லாம்
மௌனச் சிறையிலா?
தாபங்களும் இனி எனக்குத்
தனிமையானதா?
சோகங்களே பெண்களுக்கு
முடிவு சொல்வதா.....???

தோல்விகளின் இருப்பிடமாய்
நானும் ஆவதா?
வீழ்ச்சிகளே நிரந்தரமாய்ச்
சூட்டிக் கொள்வதா?
ஆண்கள் மனக் கற்பனையில்
பெண்மை கேலியா?
நாளைகளின் விலங்குகளில் என்
மனிதம் தோல்வியா.......?????
உன்னை நேசித்தேன்




எந்த ஊரில்
இருந்தாலென்ன...
என் கவிதையை நீ
தொட்டவுடன்
சிலிர்க்கும் எனக்கு!
எழுத்துக்களைப்
பார்க்கிறாய் நீ.
இந்த
எழுத்துக்களின் வழியே
உன்னை
எட்டிப் பார்க்கிறேன் நான்!
காற்று உன் வீட்டுக்
கதவுகளை
அசைக்கும்போதெல்லாம்
நினைவுபடுத்திக் கொள்...
உன் இதயத்தை
அசைக்க நான்
எடுத்த முயற்சிகளை!
ஒவ்வொரு தடவையும்
நீ பார்த்த
பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக.
அர்த்தம் சொல்லத்தான்
அகராதி கிடைக்கவில்லை...
காதலியே நீ புரிந்திடு.. காதல் என்ற போர்வையில்
பெண்கள் பின் அலைவது தான்
எனது பொழுது போக்கல்ல
பார்த்த விநாடியில் பத்திக் கொள்ள
என் காதல் பெற்றோல் காதல் அல்ல
வந்ததும் தெரியாமல்
போனதும் புரியாமல் விட
இது மின்னல் காதலுமல்ல
பலநாட் பழகி ஒருவரையொருவர்
புரிந்து கொண்ட நம்காதல்
புனிதமான உண்மைக்காதல்…
கண்ணே மணியே முத்தே என்ற
வார்த்தைகளில்தான் காதல் இருக்கிறதா?
தங்கம் வைரம் வைடூரியம் என்ற
பணம்கொடுத்து வாங்கும் பொருளில்தான்
காதல் இருக்கின்றதா?
ஆம் எனில் அன்புக்காதலியே
என் காதலுக்கு இது தெரியாது
என்காதல் அழகான அன்புக்காதல்
நித்தமும் உன்
நினைவுகளால் உண்டாகும்
சொல்ல தெரியாத என்
சோகங்கள் எல்லாம்
உரு மாறுகின்றன
கண்ணீராய் பாதியும்
கவிதையாய் மீதியும் ...!
என் கண்ணீருக்குத்தான்
எத்தனை வெட்கம் பாரேன்...
நீ விலகிச் சென்ற பிறகுதான்
அது
வெளியே எட்டிப் பார்க்கிறது!
வானத்தை நேசித்தேன்
தொட முடியவில்லை!
கடலை நேசித்தேன்
தாண்ட முடியவில்லை!
காற்றை நேசித்தேன்
பிடிக்க முடியவில்லை!
அன்பே
உன்னை நேசித்தேன்
மறக்க முடியவில்லை...!
வானிலிருந்து தான்
தேவதைகள் வருகிறார்கள் என
நம்பி கொண்டிருந்த மக்களுக்கு
நீதான் நிரூபித்து கொண்டிருக்கிறாய்
பூமியிலும் தேவதைகள் வாழ்வதை...!
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்.
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது!
கடவுளுக்கு படைக்க வைத்திருந்ததை
பசி தாளாமல் அள்ளித் தின்ற
பச்சை குழந்தையாய் –
உன்னிடம்
என் காதலை சொல்லிவிட்டு நிற்கிறேன்!
நீ என்னை தண்டிக்கப் போகிறாயா?
ஆசீர்வதிக்கப் போகிறாயா





கவிதைக்குத் தெரியும் என்
காதலின் பாசத்தை
மலருக்கு தெரியும் என்
காதலின் வாசத்தை
இசைக்கு தெரியும் என்
காதலின் ராகத்தை
காற்றுக்கு தெரியும் என்
காதலின் சுவாசத்தை
கடலுக்கு தெரியும் என்
காதலின் ஆழத்தை
உன் மனதுக்கு தெரியும் என்
காதலின் பாதிப்பை ........
செல்ல காகமே












எத்தனை முறை
கொத்தினாலும் தீராத
கனி தான் காதல்...
கோடி மீன்கள் குடித்ததனால்
குறைவு படுமா கடல் ?
உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே



நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும்
இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?



எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல காகமே....
நினைத்து நினைத்து
ஒவ்வொன்றாகச்சொல்லி
சலிக்காமல்
எப்படி உன்னால் மட்டும்
சண்டையிட முடிகிறது....?
இவ்வளவு நினைவுகளையும்
சுமந்து நிற்கும்
உன் மனதுக்கு
பல*முத்தங்களைப்
பரிசாக*த் தருகிறேன்
என்றாலும் முறைக்கிறாய்

என்னடி செய்ய நான்..?
எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?


காதலித்துப் பார்

உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்விளங்கும்....
உனக்கும்கவிதை வரும்......
கையெழுத்துஅழகாகும்.....
தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்...
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...
இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா
உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி
இந்த பூக்கள்எல்லாம்காதலை
கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!

***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்...
காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டேசாகவும்
முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...காதலித்துப் பார்!







கண்ணற்ற ஆடி

பார்த்தேன்
பார்த்தது
சிரித்தேன்
சிரித்தது
திரும்பினேன்
திரும்பி இருக்கும்
சகிக்காதென்பதால்
பார்க்கவில்லை
எதிர்பட்டவன்
சிரித்தான்
சகிக்கவில்லை-அவன்
முதுகைத்
தேடினேன்

Friday, October 9, 2009





சலனம் செய்தாய் என் மனதில்
சாந்தி கண்டேன் அவள் நினைவில்
சேர்ந்தாள் இரண்டற என்கூட
செப்பிவிட்டாள் யானுனதே என்றே
நம்பி யானும் தொடர்ந்தேனே
நம்பு மோசம் புரியாள் என்றே
நடந்ததோ மாற்றம் அறிவீரோ
நம்ப மாட்டீர் சொன்ihல் யான்
துணிந்து செய்தாள் அசை;செயலை
தவிக்கவே விட்டாள் என்னதை;தனியாய்
தாங்கா தென்றே அவள் அறிவாள்
தகும் என்றே நினதை;திட்டாளோ?

என்ன குற்றம் செய்தேன் யான்?
எதற்காய் இத்தண்டனi எனக்கு
எதனும் குற்றம் இருப்பின் அது
என்னi நேசிக்க விட்டதுவொன்றே

காதலது தெய்வீகமாம்
காண்பதெலாம் நின் முகமாம் ஆமாம்
காரிகைகள் இப்படித்தான் சாட்டிடுவார்
காதுகொடுத்து தேற்றிற்றேல் தெரிந்தீர்

அறியா மாந்தரே அறிவீர்
அறமறியாப் பாவையரை நம்பாதீர்
அஃநன்றி நடந்தீரோ தெரிந்தீர்
அன்புப் பிரிவை தாங்க மாட்டீர்


எனை, நீ பிரிந்தாலும்

அழகான கவிதை போன்றது
உன் இதழ்கள்,
வாசிக்கும் வாசகனாக நான்.

புன்ன‌கை பூ பூக்கும்
பூந்தோட்ட‌ம் உன் இதழ்கள்,
தேன் குடிக்கும் வ‌ண்டாக‌ நான்.

இன்னிசை த‌ரும் வீணை
உன் இதழ்கள்,
இத‌ழ் மேவும் கலைஞனாக‌ நான்.

ந‌ம் காத‌ல் யுத்த‌த்தில்
இத‌ழ்க‌ளே போர்க்க‌ளம்,
முத்த‌ங்க‌ளே ஆயுத‌ம்.

உயிர் உண‌ர்ந்த‌ த‌ருண‌ம் அது,
ஓர் அந்திமாலைப் பொழுதில்
காத‌ல் சொன்ன‌ முத‌ல் நொடியும்,
நீ கொடுத்த‌ முத‌ல் முத்த‌மும்.

எனை, நீ பிரிந்தாலும்
என் ஒவ்வொரு இத‌ய‌த்துடிப்பையும்,
உன் நினைவுக‌ளே முத்தமிடுகின்ற‌து.

பகலா இரவா புரியாத காலநிலை
எப்போதுமின்றி
என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது
என்னை அந்தரத்தில்
தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது

சில மணித்தியால சலனங்கள்
தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம்

ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது
அன்பாய் உன்னை வருட முடியாது
காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது
ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள்

அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா
இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக

என் உணர்வுகளே உங்களுக்கு !
மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை
எப்போதும்
அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது
அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப்
போவதுமில்லை இப்போ.
காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக
இன்னும் எத்தனை காலம்தான் நான்..

வயது வரம்புகள்
எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம்
பார்க்காது
வினோதமான உறவுகளை எப்போதும்
விதைத்த படி நீ.
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய்
என்னுடனே
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால்

என்ன செய்ய காதலே உன்னை என்ன

கண்ணீர்.. கவிதை..காதலின் சறுக்கல்


01.
கண்ணீர்
-------------

எனது இதயத்தின் இடுக்குகளிலே
கண்ணீரின் பாசி படிந்துள்ளதால்
என் இதயத்தினுள் வர நினைப்பவர்கள்
கவனம் பாசியில் வழுக்கி விழுந்துவிடுவீர்கள்

சற்று தள்ளி நின்று எட்டிப்பாருங்கள்
அங்கே நைல் நதியாய் என் கண்ணீரும்
எவெரெஸ்ட் சிகரமாய் என் பெரு மூச்சும்
மனதில் பாரமாய் இமய மலைச்சாரல்கள்

என் இதயத்தின் இரத்த குழாய்களில்
கண்ணீர்த்துளிகளும் இரத்தமும்
போட்டி போட்டு மரதன் ஓட்டம் ஓடுகிறது
யார் இறுதியில் மரணப் பரிசை பெறுவது என்று

பரவாயில்லை என் கண் மட்டும்
இன்னும் உறங்கவில்லை ஏனென்றால்
அது வற்றாத கண்ணீரைச் சிந்தும்
நயாகரா நீர் வீழ்ச்சியாகிட்டே....



02.
கவிதை
------------

காதலித்தால் கவிதை வருமாம்
உண்மையோ நானறியேன்
ஒன்று மட்டும் சொல்வேன் நான்
க(னவு) விதை என்று

காதலனும் காதலில் தோற்றவனும்
புதிய, பழைய கனவுகளை மீட்க
பண்படுத்திய இதய மண்ணிலே
விதைக்கின்ற விதைகள்தான் இது

சில வேளை அழகு என்ற கறையானும்
வசதி என்ற எறும்புகளும்
குடும்பம் என்ற நத்தையும்
க(னவு)விதைகளை நாசம் செய்யும்

அப்போதே விடடுக்கொடுக்க தயாராக
உங்கள் கைகளிலே ஏந்துங்கள்
நீங்கள் கனவுலகில் பெற்றெடுத்த உங்கள்
அன்புக் குழந்தையை மட்டும்

அது மட்டுமே உங்களுக்கு சொந்தம்
மற்றதெல்லாம் மாறிவிடும்
சந்தர்ப்ப சூழ்நிலை என்ற
வெள்ளப் பெருக்கினால்....



03.
காதலின் சறுக்கல்..
-------------------------

வெண்மையான உடலுக்குள்ளே
உண்மையை மறைத்து
ஆண்மையை ஏமாற்றும்
திறமை அது பெண்மை.

இனிக்க இனிக்க பேசி
பின் கண் சிவக்க சிவக்க அழுது
உன் நாசி வழியே நீர் வடிய
உன்னை அழ வைப்பதும் பெண்மை.

உந்தன் மனதினை மாற்றி
அதன் கோலத்தை குறைத்து பின்
இவ் அகிலத்தையே ஏமாற்றும்
ஒரு விச ஜந்து பெண்மை.

ஒரு தடவை மனிதனும் ஏமாந்தான்
இக் காதல் என்ற பெண்மையில்
அதனால்தான் வாழ்க்கைப் பாதையில்
சற்று சறுக்கி பின் எழுந்து விட்டான்.

சற்று உற்றுப்பாருங்கள் அவனை
தெரிகின்றதா காதல் வடு அவன் கண்ணில்
தெரியாது... அது தெரியாது....
அது கரைந்து போனது அவன் இதயத்தினுள்ளே..

யாரும் அழவேண்டாம் இனிமேல்
ஏன் தெரியுமா எமக்காகத்தானே
அந்த வானம் அழுகிறது அதோடு
அவனும் அழுகிறான்.

அழுது முடித்து விட்டான்
ஆனால் அவன் கண்கள் மட்டும்
அடம் பிடிக்கிறது இமை மூட
பரவாயில்லை பார்க்கலாம் நாளை..

மன்னியுங்கள்.. உங்களையும்
இந்த பெண்மையையும்
அழ வைத்ததற்கு
சென்று வருகிறேன் நான்....

இது தான் காதலோ?
---------------------------

உனக்கும் எனக்கும்
இடைப்பட்ட பொழுதுகள்
எப்போதும் அழகாய் விடிகின்றன
கவிதையாய்

கோவப்படுகையில்
நீ அடிப்பாய்
வலிப்பதில்லை – இன்றோ
மெளனம் காக்கிறாய்
வலிக்கிறதே

ஒத்த கருத்தோடும்
சிந்தனையோடும்
மாற்றுக் கருத்தில்லா
மாணிக்கங்களாய் மிளிர
நாமென்ன
கொள்கைக்காய் கை கோர்த்தவரா?

குடும்பச் சமையலில்
குழப்பங்கள் தானே குழம்பு
ஊடல்கள் தானே உப்பு

உன்னை நான் அனுசரிக்க
என்னை நீ தினம் சகிக்க
முரண்பட்ட கருத்துகள்
முதிர்வடையும் வரை
நிலாவொளியில் கதை பேசி
முடிவெடுக்காமலேயே
தூங்கிப்போவோமே
இது தான் காதலோ?



Saturday, October 3, 2009

சாமி..

எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.

போர்..

ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.

மானம்..

உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.
மந்தை..

மேடை தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா… நீ என்றேன்
கைதட்டினான்
உறுத்தல்..

இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

மனிதன்..

இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

முரண்..

இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..

ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்
நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.
வில்..

வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்
உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.

எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?

*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட உறக்கத்தை
மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
விழித்தபோது கிடைத்திருந்தது
புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.
தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்