Friday, September 25, 2009

























தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:





1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி

நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!



ஜெய் தொந்தி!


இவுங்க சொல்ல விரும்புன வடிவேலு பட டயலாக்குகள்






வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு போறேன்..
நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."

ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"

கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."

ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."

ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."

விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."

வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"

தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்..!"

சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"

அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"

மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"

மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"

லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."

பிரணாப் முகர்ஜி : "முடியல..."

சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"

கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."

ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"

விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"

மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"



Friday, October 24, 2008

நம்ம கருப்பு

கவலப்படாத -நம்ம கருப்பு இருக்கு!

போய்ப் பாத்துக் கல்பூரம் ஏத்திக் கும்புட்டு வா. '' ஊர், உலகத்தில், உயர்ந்த மதில்களுடன் கோயில்கள், கோபுரங்கள் இருக்கின்றன. ஆயிரம் இருந்தாலும் அம்மாவுக்கு யானைவாரி ஓடைக்கரையில் உள்ள குழுமூர் கருப்புதான். பூசாரித் தாத்தாவுக்குச் சொல்லி அனுப்பி அவரும் வந்து, நானும் போனேன். ``குவார்ட்டர்கூட இல்லாம கும்புடுறானாம், கும்புடு! '' உடைத்து வைத்துச் சூடம் ஏற்றினார். மணியை ஆட்டி, வேண்டிப் பாடினார்.` `ஒம்மா ஒன்ன வளக்க எம்மாம் பாடுபட்டவ தெரியுமா?' 'கருப்புக்குக்கூடத் தெரியாமல் இருக்கலாம். `காத்தாயி'க்குத் தெரியும்! நோய் நொடிகளில் இருந்து பேய் பிசாசுகளிடம் இருந்து காத்தஆயி. இவள் ஓடைக்கரையில் கிடக்கிறாள். அம்மா வீட்டுத் திண்ணையில். என்னோடு நகரத்துக்கு வந்து இருக்கலாம் இந்தக் காத்தாயிகள். வரமாட்டார்கள்! இவர்கள் இராச்சியம் இவர்களுக்கு. மறுப்பவர்களுக்குச் செய்ய முடிகிற மரியாதை : இப்படிப் போய் பார்ப்பதுதான் போலும்..
இன்று ஆயுதத்தைஅனுப்புகிறது - பௌத்தத்தைநேற்றுஇலங்கைக்கு அனுப்பியஇந்தியா
ஓடமுடியவில்லைவிடுதலைக்கு முன்புநம் கடலில்வ.உ.சி.யின் கப்பல்...இன்றுந்தான்-
ஓடமுடியவில்லைவிடுதலைக்குப் பின்பும்நம் கடலில்இந்திய மீனவனின்கப்பல்...
ஒட்டாத அமெரிக்காவும்ரஷ்யாவும் இணைந்தன-கொலைவெறிஹிட்லரைஎதிர்க்க
ஒட்டாதஇந்தியாவும்பாகிஸ்தானும்இணைந்தன -கொலைவெறிமகிந்தாவைஆதரிக்க...
புரியும்போல் இருக்கிறது இந்தியாவின்கொள்கை -நாராயணனுக்கு மட்டும்..